*
உலக மரங்களுக்கு
தமக்கே தமக்கென
தத்துவமொன்று தேவைப்பட்டது.
தவம் மகிழ்ந்த
கடவுள்
தத்துவ நத்தையை
அருளினார்
உப்பிய வயிற்றை தடவியபடி
உலகின் கடைசி இலையில்
அது எழுதியது
“ஒரு மரத்தின்
எல்லா இலைகளும்
ஒன்று போல இருப்பதில்லை”.