Tuesday, December 8, 2015

*

உலக மரங்களுக்கு 
தமக்கே தமக்கென 
தத்துவமொன்று தேவைப்பட்டது.

தவம் மகிழ்ந்த
கடவுள்
தத்துவ நத்தையை 
அருளினார்

உப்பிய வயிற்றை தடவியபடி
உலகின் கடைசி இலையில்
அது  எழுதியது

“ஒரு மரத்தின் 
எல்லா இலைகளும்
ஒன்று போல இருப்பதில்லை”.

No comments:

Post a Comment